For Quick Alerts
For Daily Alerts
Just In
குற்றப்பின்னணி போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்
மதுரை: புகார்களில் சிக்கிய மூன்று போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் பணிபுரிபவர் மகேஸ்வரி. இவர் அனைத்து மகளிர் மதுரை தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது, குடும்பப் பிரச்னை தொடர்பாக இவர் மீது வழக்கு உள்ளது.
அதேபோல், தல்லாகுளம் போக்குவரத்து போலீசில் பணிபுரியும் சிவகுமார், கடந்த வாரம் எஸ்.ஐ ஜெயராஜுடன் தகராறு செய்தாக புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கரிமேடு சட்டம் ஒழுங்கு போலீசில் பணிபுரியும், சாதிக்பாட்சா மீது நெல்லையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட புகார்களின் அடிப்படையில் மூன்று போலீசாரையும், போலீஸ் கமிஷனர் நந்தபாலன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளர்.
Comments
Story first published: Friday, November 13, 2009, 14:59 [IST]