தூத்துக்குடி - கன மழையால் ஒரே நாளில் 73 வீடுகள் சேதம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஓரே நாளில் 73 வீடுகள் இடிந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 51 மிமீ மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் பகுதியில் கனமழைக்கு நேற்று ஓரே நாளில் 64 வீடுகள் பகுதியாகவும், 1 வீடு முழுமையாகவும் சேதம் அடைந்தது. சாத்தான்குளம் பகுதியில் 4 வீடுகள் முழுமையாகவும், 2 வீடுகள் பகுதியாகவும் சேதமாயின.
எட்டயப்புரம் ஓட்டப்பிடாரம் பகுதியில் 1 வீடு இடிந்தது. மொத்ததில் மாவட்டம் முழுவதும் நேற்று ஓரே நாளில் 73 வீடுகள் பகுதியாகவும், 3 வீடுகள் முழுமையாகவும் சேதம் அடைந்தன. சேதமான வீடுகளுக்கு வருவாய் துறையினர் மூலம் அரசு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications