For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னையில் ரூ. 4000 கோடி முதலீடு செய்யும் மிஷெலின்
சென்னை: பிரான்ஸ் நாட்டின் முன்னணி டயர் கம்பெனியான மிஷென், சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் ரூ. 4000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள தொழிற்பேட்டையில் 290 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மிஷெலின் டயர் தொழிற்சாலை, 2012ல் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 7 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய மிஷெலின் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தினால், 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
Story first published: Monday, November 16, 2009, 17:45 [IST]