தீயில் தூங்கும் தஞ்சை சாமியார்-குல்பர்காவில் பரபரப்பு

தீயை விழுங்கும் சாமியார்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த ராம்பாபு சுவாமிஜியின் செயல் படு வித்தியாசமாக இருக்கிறது.
தீக்குச்சியில் இருந்து பறந்து வரும் நெருப்பு நமது உடலில் பட்டாலே துடித்துப் போய் விடுவோம். ஆனால் இந்த சாமியார் தொடர்ந்து நான்கு மணி நேரம் தீயில் படுத்துத் தூங்குகிறாராம். அதுவும் முழுக்க உடை அணிந்து தூங்குகிறாராம். நம்ப முடியவில்லை அல்லவா. ஆனால் குல்பர்கா மாவட்டம், கனகாபூர் கிராமத்தில் சமீபத்தில் இவர் விசிட் அடித்தபோது இந்த அதிசயத்தை செய்தாராம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் கனகாபூர் கிராமத்தில் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது தீமூட்டி ஹோம் வளர்த்தார். பின்னர் அதில் படுத்துக் கொண்டு நான்கு மணி நேரம் தூங்கினாராம். மேலும், உலக சமுதாயத்தின் நலனுக்காக பிரார்த்தனையும் செய்தாராம்.
அந்த கூத்தின் விவரத்தைப் பார்ப்போம்...
இந்த சாமியார் வெறும் வாழைப்பழத்தையும், தண்ணீரையும்தான் சாப்பாடாக சாப்பிடுகிறாராம். விநாயகருடன் அவ்வப்போது பேசும் பழக்கமும் உண்டாம். உலக நலனுக்காக அவ்வப்போது ஹோமம் வளர்த்து அதில் படுத்துத் தூங்குவது இவரது வழக்கமாம்.
கனகாபூர் வந்த சுவாமிஜி அங்குள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு விசிட் அடித்தார். அங்கு ஹோம் வளர்த்து வருவதை அறிந்த அவர் தான் அதில் படுத்துத் தூங்கவும், பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்குமாறு கூறினாராம்.
அந்த ஹோம குண்டம் 3க்கு 3 அடி அளவு கொண்டதாகும். அவரது கோரிக்கையைக் கேட்ட பக்தர்கள் வாயை மூட முடியாமல் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் மூழ்கினராம். தகவல் அறிந்து மேலும் பல பக்தர்கள் குவிந்து விட்டனராம்.
பின்னர் தனது காவி உடையுடன் கண்களை மூடியபடி குண்டத்துக்குள் இறங்கினாராம் சாமியார். பின்னர் தொடர்ந்து நான்கு மணி நேரம் கண்களை மூடிய நிலையில் ஹோமத்துக்குள் படுத்துத் தூங்கினாராம்.
தமிழகத்தில் இதுபோல ஐந்து முறை செய்துள்ளாராம் சாமியார். அவரிடம் இறை சக்தி நிறைய இருப்பதாகவும், அதனால்தான் இவ்வாறு செய்ய முடிவதாகவும் பக்தர்கள் மெய் சிலிர்க்க கூறுகின்றனர்.
ஆனால் இதெல்லாம் சுத்த ஹம்பக், நிச்சயமாக முடியவே முடியாது. இதெல்லாம் பக்தர்களின் கற்பனையாக இருக்க வேண்டும் இல்லை, கண்கட்டி வித்தையை அந்த சாமியார் செய்திருக்க வேண்டும் என டாக்டர்கள், மனநல வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
நீங்க சொல்லுங்க, தீமூட்டி சோறு பொங்கலாம், தீயில் படுத்துத் தூங்க முடியுமா...???
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications