டெல்லியில் காரில் சிறுமி கற்பழிப்பு!
டெல்லி: டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்னேகா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ள). இவரது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். தாய் மகிபல்பூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் 2 பேர் ஸ்னேகாவுக்கு அடிக்கடி ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளனர். ஸ்னேகா மீதுள்ள பாசத்தில் 2 பேரும் ஐஸ்கிரீம் வாங்கி தருகிறார்கள் என்று தாயார் நினைத்துக் கொண்டார்.
இந்நிலையில் 2 புரோக்கர்களும் ஸ்னேகாவை காரில் டெல்லி விமான நிலைய பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏற்றிச் சென்றனர். ஆனால், அவர்கள் வழியில் ஸ்னேகாவை மிரட்டி காரிலேயே கற்பழித்தனர்.
இதில் சிறுமி மயங்கியதால் பயந்துபோன இருவரும் அவரை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு தப்பினர்.
இதுபற்றி ஸ்னேகா பெற்றோரிடம் கூறவே உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், இதுபற்றி துவராகா போலீசாரிடம் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 2 புரோக்கர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications