ரயில்வே திட்டங்கள்-கூடுதல் நிதி கோரி மம்தா பானர்ஜிக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்குக் கூடுதலாக ரூ. 461 கோடி நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்துமாறு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுவரும் முக்கிய பல ரயில்வே திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையால் சுணக்கம் ஏற்பட்டுள்ளதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
குறிப்பாக, அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டங்களைப் பொறுத்தவரையில் 2009-2010ம் ஆண்டில் ரூ. 240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டங்களைக் குறித்த காலத்தில் நிறைவேற்றுவதற்கு மேலும் ரூ. 280 கோடி தேவைப்படுகிறது.
மிக முக்கியமான மயிலாடுதுறை- திருவாரூர்- காரைக்குடி- திருத்துறைப்பூண்டி- திருக்குவளை வழியாக நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதைத் திட்டங்கள் போதிய நிதி ஒதுக்கீடு இன்மையால் முடிவடையாமல் நிலுவையில் உள்ளன.
அதே போல, இரட்டை ரயில் பாதைத் திட்டத்தைப் பொறுத்தவரையில் 2009-2010ம் ஆண்டில் ரூ. 112 கோடி நிதி ஒதுக்கீட்டில் பணிகள் நடைபெறுகின்றன.
செங்கல்பட்டு- விழுப்புரம் மார்க்கத்தை இரட்டை ரயில் பாதையாக்கும் திட்டத்திற்கு மட்டும் இந்த ஆண்டில் ரூ. 77 கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
இதேபோன்ற நிலை, புதிய ரயில் பாதைகளை அமைப்பதிலும் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 85 கி.மீ. நீளமுள்ள கரூர்- சேலம் புதிய ரயில் பாதைத் திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகிறது.
நடப்பு 2009-2010ம் ஆண்டில் ரூ. 36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை இத்திட்டத்திற்கு ரூ. 34 கோடி ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டதிற்கு இந்த ஆண்டில் ரூ. 140 கோடி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் உரிய முன்னேற்றம் ஏற்படவேண்டுமெனில் மேலும் ரூ. 104 கோடி தேவைப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.
இதேபோல, திண்டிவனம்-திருவண்ணாமலை, திண்டிவனம்- நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, மாம்மல்லபுரம் வழியாக சென்னை- கடலூர் ஆகிய 5 புதிய திட்டங்களும் நிதி இல்லாமல் சுணங்கியுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து பணிகளை விரைந்து முடித்திட உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications