கூலிப்படை அனுப்பி கொள்ளையடித்த பெண் 'தாதா'
சென்னை: கூலிப்படையை அனுப்பி ரூ.14.5 லட்சம் கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்தப் பெண் வட்டிக்கு பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
சென்னை புரசைவாக்கத்தில் மோகன்குமார் என்பவர் மோகன்குமார் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றும் கண்ணன் (27) என்ற ஊழியர் கடந்த மாதம் 20ம் தேதி ரூ. 14.5 லட்சம் பணத்துடன் நிறுவனத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அண்ணாநகர் சாந்தி காலனி ஏ.ஜி.பிளாக் பகுதியில் வந்தபோது அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மிளகாய் பொடி தூவி தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றது.
இந்தக் கும்பலைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன.
மோகன்குமாரிடம் பெரம்பூரை சேர்ந்த ரூபி (40) என்ற பெண் 1.5 சதவீத வட்டிக்கு கடன் வாங்கி, அதை 2.5 சதவீத வட்டிக்கு மற்றவர்களுக்கு கடன் கொடுத்து வந்தார். ரூபியும் அவரது கணவரும் இணைந்து இந்தத் தொழிலை செய்து வந்தனர்.
ஆனால், சமீபத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் மோகன்குமாருக்கும், ரூபிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து ரூபி கூலிப் படையை அனுப்பி பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரூபி அனுப்பிய கூலிப்படை கும்பலை சேர்ந்த இம்ரான், செய்யது இம்ரான், முகமது ரியாத் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்தை கொள்ளையடிப்பதற்காக இவர்களுக்கு ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார் ரூபி. இவர்களுக்கு பின்னணியில் செயல்பட்ட தினேஷ் என்ற வக்கீல் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வட்டிக்குப் பணம் கொடுக்கும் ரூபிக்கு அரசியல் பின்னணி இருந்ததால் கிட்டத்தட்ட தாதா போல செயல்பட்டு வந்துள்ளார். அவரது அரசியல் செல்வாக்கால் போலீசாரால் முதலில் அவரை நெருங்க முடியவில்லை.
ஆனாலும் தனிப்படையினரை அவரை 2 நாட்களுக்கு முன் கைது செய்துவிட்டு ரகசியம் காத்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்த பின்னரே அவர் கைதான விவரமே வெளியில் வந்துள்ளது.
ரூபியிடமிருந்து கொள்ளைப் பணம் முழுவதும் மீட்கப்பட்டது.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!











Click it and Unblock the Notifications