ஜான்சி ராணி எழுதிய கடிதம் பிரிட்டன் நூலகத்தில் கண்டெடுப்பு

Subscribe to Oneindia Tamil

Rani Lakshmibai
லண்டன்: லார்டு டல்ஹவுசீக்கு ஜான்சி ராணி எழுதிய கடிதம் ஒன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜான்சி ராணி லட்சுமிபாய் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் நம்மிடம் சிறிதளவே இருப்பதால் இந்த கடிதத்தை முக்கியமானதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

பிரிட்டிஷ் நூலகத்தின் ஆவணப் பிரிவில் காணப்பட்ட இந்த கடிதம், பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. 1897ம் ஆண்டுக்கு சற்று முந்தைய காலகட்டத்தில் அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் லார்டு டல்ஹவுசீக்கு முகவரியிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், லட்சுமிபாயின் கணவர் மறைந்த துக்கமும், அதன் பிறகு நாட்டின் நன்மைக்காக அவர் எதிர்கொண்ட சம்பவங்களும் விவரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய லிவின் பென்தாம் பவுரிங் என்பவர் மஹாராஜாக்கள் தொடர்பான ஆவணங்கள், ஓவியங்களை பவுரிங் கலெக்ஷன் என்ற பெயரில் சேகரித்து வைத்துள்ளார். அதில் இந்த கடிதம் இருந்ததாக லண்டன் நூலக ஆராய்ச்சியாளர் தீபிகா தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+