For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்செந்தூரில் இடி தாக்கி மீனவர் பலி
திருச்செந்தூர்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் இடிதாக்கி பலியானார்.
திருசெந்தூர் வீரபாண்டியன் பட்டிணம் தூய சவேரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார். மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் இன்று காலை திருச்செந்தூர் கடல் பகுதியில் ஒரு படகில் தனது நண்பர்கள் 4 பேருடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அதனை பொருட்படுத்தாமல் மீன்பிடித்து கொண்டிருந்த குமாரை இடி-மின்னல் தாக்கியது. இதனால் செயலிழந்து போன அவரை உடனடியாக திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிக்சை பலனின்றி குமார் பலியானார். கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த குமார் இடி தாக்கியதில் பலியான சம்பவம் அங்குள்ள மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Wednesday, November 18, 2009, 17:16 [IST]