செக்ஸ் டார்ச்சர்-திருச்சி பாதிரியார் மீது பெண் புகார்
திருச்சி: பாதிரியாரின் 'செக்ஸ் டார்ச்சர்' தாங்க முடியவில்லை. என்னை கற்பழித்துவிட்டு, அடியாட்கள் முலம் மிரட்டுகிறார் என்று பெண் ஒருவர் திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை என்ற பெண் அளித்துள்ள புகார் மனு விவரம்:
நான் சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகள். கடந்த சில ஆண்டுக்கு முன்பு சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். வரதட்சணை பிரசனையால், நான் கணவரை பிரிந்து வாழ்கிறேன்.
திருச்சி செவன்த் டே கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார்.
பின்னர் வேறு ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த பாதிரியார், அதன் பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார். இதன் விளைவாக பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை.
இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். இதி்ல், ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். பாதிரியார் சுதாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாமல் மகளிர் அமைப்புகளை கூட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் பூங்கோதை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications