ஜார்க்கண்ட் தேர்தல்: ரூ.1க்கு 1 கிலோ அரிசி- பாஜக
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.
ஜார்க்கண்டில் வரும் 25ம் தேதி முதல் 5 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் ரகுவார் தாஸ் வெளியிட்டார்.
அதில், பாஜக ஆட்சி அமைத்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு 3 மாதங்களுக்குள் கார்டுகள் தரப்படும்.
அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு கிலோ உப்பு 25 பைசாவுக்கு வழங்கப்படும்.
மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.
வீடு இல்லாதவர்களுக்காக 3 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
நக்ஸல்களை ஒடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications