வேன் கவிழ்ந்து ஆயுதப்படை காவலர் பலி
வள்ளியூர்: நாங்குநேரி அருகே போலீஸ் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து, ஆயுதப்படை காவலர் பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடியில் நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணிக்காக நெல்லை, கன்னியாகுமரி, மாவட்ட போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
நேற்று காலை குமரி மாவட்ட எஸ்.பி சண்முகவேல் தலைமையில் நாகர்கோவில் ஆயுதப்படை போலீசார் நாகர்கோவிலில் இருந்து வேனில் புறப்பட்டனர்.
வேன் நாங்குநேரி வாகைகுளம் அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. நிலைதடுமாறி சாலை நடுவே உள்ள தடுபபு சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது.
இதில் வேன் டிரைவர் மோகன் ராஜ், மற்றும் போலீசார் ஹரி, பிஜூ, ஸ்டான்லி ஜோன்ஸ், ரத்தனசாமி, சுந்தபாண்டி, சேவியர், திருவான், தேவகுமார், செந்தில்குமார், மரி அற்புதம், ஜெபசிங், விஜயகுமார் ஆகிய 13 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் ஸ்டான்லி ஜோன்ஸ் சிகி்ச்சை பலனின்றி உயிர்ழந்தார். களியாக்கவிளையை சேர்ந்த இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications