தமிழர் மறுகுடியமர்த்தல் பணிகள் மந்தம்- ஐ.நா

இலங்கை வந்த ஜான் ஹோம்ஸ் இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கடந்த மே மாதம் நான் இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்த்தபோது இருந்ததை விட தற்போது அங்கு எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆனால் போர் முடிந்து பல மாதங்கள் கடந்தும், இன்னும் பிரதான நோக்கம் நிறைவேறாத நிலையில் உள்ளது.
இடம்பெர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு பெரும் சேவைகளை வழங்க வேண்டிய கட்டாயத்தேவை உள்ளது.
நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவர். ஆனால் அப்போதும் அவர்களின் சுதந்திர நடமாட்டம் கேள்விக்குரியதாகவே இருக்கும்.
எனவே அவர்கள் பணிக்கு செல்லவும், உறவினர்களின் வீடுகளுக்கு செல்லவும் ஏனையவர்கள் போலவே அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து வெளியுறவுததுறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவிடம் பேசியுள்ளேன் என்றார்.
பின்னர் அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார் ஹோம்ஸ்.












Click it and Unblock the Notifications