For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவில் மாவட்ட நிர்வாகிகள் ஏழு பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டம் வேலாம்பாளையம் நகர அவைத் தலைவர் கேபிள் பாபு கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் செல்வம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளர் மாயாண்டி, திருச்சி மாநகர மாவட்ட தலைமை பொதுக் குழு உறுப்பினர் வெங்கடேஷ், கோவை மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து மட்டும் விடுவிக்கப்படுகிறார்கள்.

திருச்சி மாநகர மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினராக ஜோசப் ஜெரால்டு, கோவை மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேஷ் குமார், துணைச் செயலாளர்கள் ரமேஷ்குமார், அஸ்வின்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் அணி செயலாளராக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல புதுச்சேரியில், காரைக்கால், டி.ஆர்.பட்டினம், உழவர் கரை, இலாஸ்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய செயலாளர்கள், அவைத் தலைவர்கள், பொருளாளர்கள், துணைச் செயலாளர்களை விஜய்காந்த் நியமித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X