ஸ்வைன்-பலியானோர் எண்ணிக்கை 546 ஆனது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் 6 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் ஒருவர் நேற்று உயிரிழந்தார். ஹரியாணாவில் 3 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும் இறந்தனர்.
மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 216 பேர் இறந்துள்ளனர். 119 பேர் கர்நாடகத்தில் இறந்துள்ளனர். ஆந்திராவில் 49, குஜராத்தில் 45, ராஜஸ்தானில் 30, கேரளாவில் 25, டெல்லியில் 18, ஹரியாணாவில் 8, தமிழகத்தில் 10, புதுச்சேரியில் 6, கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 5, உ.பியில் 3, ஒரிசா, பஞ்சாப் தலா 2, சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம், மிஸோரமில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications