கடத்தல் நாடகம்-போலீஸை அலைய விட்ட சிறுவன்
சென்னை: டிவி ரிமோட்டை உடைத்து விட்டதால் தந்தை திட்டியதால் கோபமடைந்த மகன் வீட்டை விட்டு வெளியேறி, போலீஸாரை டென்ஷன்படுத்தி அவர்களை அலைக்கழித்துள்ளான்.
சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவன் சுரேஷ். 9ம் வகுப்பு படித்து வருகிறான். செவ்வாய்க்கிழமை காலை இவன் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலையில் திரும்பி வரவில்லை.
இதையடுத்து சுரேஷின் தந்தை ரங்கநாதன், பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளார். அப்போது, வகுப்புகள் முடிந்ததும் சுரேஷ் கிளம்பிச் சென்றதாக தெரிய வந்தது.
இதையடுத்து மகாகவி பாரதி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் ரங்கநாதன். போலீஸார் சுரேஷைத் தேட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், இரவு 8.30 மணியளவில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய குரல், ரூ. 1 கோடி தந்தால் சுரேஷை விடுவிப்போம் என்று கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன், போலீஸாரிடம் இதைத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சுரேஷ் தேடுதல் வேட்டை முடுக்கி விட்பட்டது. இந்த நிலையில் ரங்கநாதன் செல்போனுக்கு வந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது திருத்தணியிலிருந்து அது வந்தது என்பதைக் கண்டுபிடித்து அங்கு ஒரு தனிப்படை அனுப்பப்பட்டது.
மீண்டும் போன் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் முன்னேற்பாடுகளுடன் ரங்கநாதன் காவல் நிலையத்தில் இருக்க வைக்கப்பட்டார். ஆனால் போன் எதுவும் வரவில்லை. இதையடுத்து ஏற்கனவே வந்த எண்ணுக்கு ரங்கநாதனை விட்டு போன் செய்ய வைத்தனர் போலீஸார்.
அப்போது மறு முனையில் ஒரு பெண் பேசினார். குழம்பிப் போன போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, மின்சார ரயிலில் தான் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தபோது பள்ளிச் சீருடையில் ஒரு சிறுவன் போனை இரவல் வாங்கி பேசியதாக தெரிவித்தார். இதையடுத்து சுரேஷ்தான் போனில் பேசியிருக்க வேண்டும் என போலீஸார் ஊகித்தனர்.
மேலும் அந்த சிறுவன் சென்டிரல் ரயில் நிலையம் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து சென்டிரல் ரயில் நிலையத்தில் போலீஸார் வலை விரித்தனர். நள்ளிரவு 1 மணியளவில் சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான் சிறுவன் சுரேஷ். இதையடுத்து அவனைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, டிவி ரிமோட்டை தான் உடைத்து விட்டதாகவும், இதற்காக தந்தை திட்டியதாகவும், கோபமடைந்து வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திருத்தணிக்குச் சென்றதாகவும் தெரிவித்தான்.
இதையடுத்து போலீஸார் அவனை கடுமையாக எச்சரித்து பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!











Click it and Unblock the Notifications