பொன்சேகாவை கொல்ல முயற்?-விசாரிக்க உத்தரவு

இதுகுறித்து தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையத்தின் இயக்குநர் லட்சுமண் ஹுலுகல்லா கூறுகையில், எதிர்க்கட்சிக்குச் சொந்தமான பத்திரிக்கை ஒன்றில் பொன்சேகாவை கொல்ல அரசுடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவர் மனித குண்டுக்கு ஏற்பாடு செய்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு. இதை தீவிரமாக விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.
கடந்த திங்கள்கிழமை ஓய்வு பெற்றார் பொன்சேகா. அவர் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசுடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதி, பொன்சேகாவைக் கொல்ல மனித வெடிகுண்டுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்தே இதுகுறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
பொன்சேகாவுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு:
இந் நிலையில் பொன்சேகாவை இலங்கைக்கான அமெரிக்க தூதர் பற்றீசியா சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், இந்த சந்திப்பிற்கான காரணம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில் இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சரத் பொன்சேகாவைச் சாட்சியாகப் பயன்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது.
இந் நிலையில் இச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications