ஜெய்ராம் ரமேஷுக்கு கருப்புக் கொடி காட்டிய பெரியார் தி.க.
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்: கோவைக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு பெரியார் தி.கவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து 18 பேரைக் கைது செய்தனர் போலீஸார்.
வனத்துறை சார்பில் கோவையில் இன்று நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கோவை வந்துள்ளார்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்திட ஜெய்ராம் ரமேஷ் கேரளாவிற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து வடகோவை மேம்பாலம் அருகே பெரியார் தி.க.வினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications