பன்றிக் காய்ச்சலுக்கு புதுச்சேரியில் 7வது பலி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பன்றிக் காய்ச்சலுக்கு புதுவையில் 7வது பலியாக 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சிறுவன் நெய்வேலியைச் சேர்ந்தவன்.
நெய்வேலியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ராம்குமார் என்பவன் தொண்டை வலி, காய்ச்சல், மூச்சுத்திணறல் காரணமாக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு அவனுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று சிறுவன் உயிரிழந்தான்.
இவனையும் சேர்த்து புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இறந்த அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications