லிபரான் கமிஷன் கடந்து வந்த பாதை!

சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு பின்னர், அப்போதைய நரசிம்மராவ் அரசு, நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்தது.
பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக அமைந்தவர்கள், பின்னணியில் இருந்தவர் மற்றும் இச்சம்பவத்திற்கு தொடர்புடைய அத்தனையையும் விசாரித்து அறிக்கையாக அளிக்குமாறு லிபரான் கமிஷனை அரசு கேட்டுக்கொண்டது.
கூடிய விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க அரசு அப்போது கேட்டுக்கொண்டது. ஆனால், லிபரான் கமிஷன் தனது விசாரணையை முடிக்கு 17 ஆண்டுகளை எடுத்துக் கொண்டு விட்டது.
லிபரான் கமிஷன் தனது விசாரணையை 1993ம் ஆண்டு மார்ச் மாதமே துவங்கிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், லிபரான் கமிஷன் விசாரணைக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என பலமுறை குற்றம்சாட்டப்பட்டது.
குறிப்பாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது இதுபோன்ற தகவல்கள் பரவலாக வெளியாயின. வாஜ்பாய் பிரதமராகவும், அத்வானி மத்திய உள்துறை அமைச்சராகவும் இருந்த காலகட்டம் அது.
லிபரான் கமிஷன் முன்பு ஆஜராக பல்வேறு சங் பரிவாரத் தலைவர்கள் நீதிமன்றத்தில் பெற்ற தடையாணைகளும் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக அமைந்தன.
லிபரான் கமிஷனின் 399வது விசாரணை அமர்வி்ல்தான் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் அயோத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களிடம் அவர்களின் கருத்தைக் கேட்டு பதிவு செய்ய முடிந்தது.
2004ம் ஆண்டில் கமிஷன் முன்பாக முதல்முறையாக கல்யான் சிங் ஆஜரான போது, 'பாபர் மசூதி இடிப்பு, கடவுளின் செயல். பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் எனக்கு எவ்வித வருத்தமும் கவலையும் இல்லை' என்று பகிரங்கமாக கூறினார்.
2005ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கடைசியாக பி.வி.நரசிம்மராவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோரிடமும் கமிஷன் விசாரணை நடத்தியது.
ஆரம்பத்தில் இக்கமிஷனுக்காக ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர் 48 முறை நீட்டிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நீதிபதி லிபரான் தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகிறது. அத்வானி உட்பட பல முக்கிய தலைவர்களும் வழக்கில் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் லிபரான் கமிஷன் அறிக்கை வெளியாவது இந்த சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications