சென்னை: கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் தீ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிண்டியில் உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் இன்று பிற்பகல் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
கிண்டி ரெயில் நிலையம் அருகே உள்ள கனரா வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பிற்பகல் 12 மணியளவில் திடீரென புகை காணப்பட்டது. அருகே, ரெயில்வே நிலையத்தில் டிக்கெட் எடுக்க வரிசையில் நின்ற பொதுமக்கள் இதைப் பார்த்து சத்தம் போட்டனர்.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏ.டி.எம்.மில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
தீ விபத்தால் அங்கிருந்த பணம் எடுக்கும் இயந்திரங்கள் இரண்டும் பழுதடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications