வீடு புகுந்து கத்திமுனையில் நகை, பணம் கொள்ளை- முகமூடி கும்பலுல் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற முகமூடிக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, தாம்பரம் பாரதிநகர் முதல் தெருவில் வசித்து வருபவர் திலீப். மனைவி கிரேஸ் (55). நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் 6 கொள்ளையர்கள் இவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.
தனியறையில் தூங்கிக்கொண்டிருந்த கிரேஸ் சத்தம் கேட்டு எழுந்தார். முகமூடி அணிந்திருந்த 6 கொள்ளையர்களும் கிரேசின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட்டால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த ரூ.4 லட்சம் பணம் மற்றும் கிரேஸ் அணிந்திருந்த 10 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்த 6 பேரும் கிரேசை கட்டிப்போட்டு விட்டு தப்பிச் சென்றனர்.

கொள்ளையர்களுக்கு பயந்து அமைதியாக இருந்த கிரேஸ் அவர்கள் தப்பிச்சென்ற பின்னர்தான் சத்தம் போட்டுள்ளார். இதன்பிறகே வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்துள்ளனர்.

போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முகமூடி கொள்ளையர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+