கேரளாவிடம் புதிய அணை கட்டும் திட்டமில்லை-ஜெய்ராம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான திட்டம் எதையும் கேரள அரசு இதுவரை தரவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில்,
பெரியார் புலிகள் சரணாலயத்தின் 92 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பில் 2.5 ஹெக்டேர் பரப்பில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
16.9.2009 அன்று நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய நிலைக் குழுவின் 16-வது கூட்டத்தின் பரிந்துரைக்கு ஏற்பவே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியானது சில நிபந்தனைகளை பின்பற்றுவதற்கு உட்பட்டதாகும்.
இருப்பினும், முல்லை பெரியாறு நீர்த்தேக்க பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான வன ஆய்வு மேற்கொள்ள கேரள அரசிடமிருந்து எந்த திட்டமும், 1980-ம் வருடத்திய வனங்கள் (பாதுகாப்பு) சட்டப்படி பெறப்படவில்லை என்றார் ரமேஷ்.












Click it and Unblock the Notifications