1.5% வருவாய் தரும் எஸ்பிஐயின் தங்க டெபாஸிட் திட்டம்!
வீட்டில் பழைய நகைகளை சும்மா வைத்திருக்கிறீர்களா... இனி அவற்றை வைத்தும் சம்பாதிக்கலாம். ஆம்... இந்த நகைகளை பாரத ஸ்டேட் வங்கியில் டெபாஸிட் செய்தீர்களென்றால், மாதம்தோறும் அதற்கு வட்டி தரும் திட்டத்தை அறிவித்துள்ளனர்.
கோல்டு டெபாசிட் திட்டம் என்ற இந்த திட்டப்படி தை அடிக்கடி பயன்படுத்தாத பழைய தங்க நகைகளை மொத்தமாக எஸ்பீஐயில் டெபாஸிட் செய்துவிடலாம். ஆனால் இந்த நகைகள் மீண்டும் உங்களுக்கு அதே வடிவில் கிடைக்காது.
இத்திட்டத்தில் பெறப்படும் நகைகள் மும்பையில் உள்ள மத்திய அரசின் நாணய அச்சடிப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு நகைகள் உருக்கப்பட்டு, கழிவுகள் நீக்கப்படும். சுத்தத் தங்கமாக்கி (999 சுத்தம்) பிஸ்கெட்டுகளாக மாற்றிவிடுவார்கள்.
அதன் மதிப்பை நிர்ணயம் செய்து, வாடிக்கையாளருக்கு அந்த தொகைக்கு தங்க டெபாசிட் சான்றிதழ் அளிக்கப்படும். தங்க டெபாசிட் தொகை மீது 1.5 சதவீதம் வரை வட்டியை வங்கி அளிக்கும்.
இந்த திட்டத்தின்கீழ் டெபாசிட் செய்ய குறைந்தபட்சம் 500 கிராம் (62.5 பவுன்) நகை தேவை.
குறைந்தது 3 ஆண்டு கால டெபாசிட்டாக ஏற்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.