திமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன்-எஸ்.வி.சேகர்
சீர்காழி: தமிழகத்தில் உள்ள 40 லட்சம் பிராமணர்களின் வாக்குகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறும் என்று நடிகரும், மைலாப்பூர் தொகுதி அதிமுக அதிருப்தி எம்எல்ஏவுமான கூறினார்.
தென்னிந்திய பிராமணர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவராக உள்ள அவர் சீர்காழி அருகேயுள்ள வைத்தீசுவரன் கோவிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்.
தமிழகத்தில் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். முதல்வர் கருணாநிதியால் மட்டுமே முற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு 16 சதவீதம், குறிப்பாக பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முடியும்.
இதன்மூலம் 40 லட்சம் பிராமணர்கள் வாக்குகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மாறும்.
தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். இதனால் 20 லட்சம் குடும்பங்கள் பயனடையும்.
முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களை விட மழைதான் நமக்கு சாதகமாக உள்ளது.
எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாததற்கு இடைதேர்தலால் வீண் செலவு ஏற்படக்கூடாது என்பதே காரணம் என்றார்.












Click it and Unblock the Notifications