ஜார்க்கண்ட்-முதல்கட்ட தேர்தல் முடிந்தது
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கான முதல் கட்டத் தேர்தல் இன்று நடந்தது.
82 உறுப்பினர்கள் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று 26 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.
நக்ஸல் பாதிப்பு மிக்க இந்த மாநிலத்தில் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வனப் பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
காங்கிரஸ், பாஜக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை இங்கு களத்தில் உள்ளன.












Click it and Unblock the Notifications