சிக்கலில் மாட்டும் நீதிபதியிடம் பேசிய அமைச்சர்!
டெல்லி: சிபிஐ விசாரிக்கும் ஒரு வழக்குத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியிடம் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து தகவல் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய தகவல் ஆணையம் கோரியுள்ளது.
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்தது தொடர்பான சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர் கிருபாசங்கருக்கும், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலமாக மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி நீதிமன்றத்திலேயே கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அந்த அமைச்சர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை. பின்னர் அந்தப் பிரச்சனை அத்தோடு அமுக்கப்பட்டது.
இந் நிலையில நீதிபதியிடம் பேசிய அமைச்சர் யார், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற முழு விவரத்தையும் தெரிவிக்குமாறு மத்திய தகவல் ஆணையத்திடம் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடு்த்த மனுதாரர் கேட்ட விவரங்களை அளிக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் தகவல் ஆணையம் கோரியுள்ளது.
மனுதாரரின் கேள்விகளுக்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்கப்படும் என மத்திய தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா தெரிவித்துள்ளார்.
-
கரூர் வழக்கு.. டெல்லிக்கு கூப்பிடும் சிபிஐ! விஜய் ஆஜராவது சந்தேகம்தான் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு












Click it and Unblock the Notifications