சிக்கலில் மாட்டும் நீதிபதியிடம் பேசிய அமைச்சர்!
டெல்லி: சிபிஐ விசாரிக்கும் ஒரு வழக்குத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ரகுபதியிடம் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் யார் என்பது குறித்து தகவல் அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய தகவல் ஆணையம் கோரியுள்ளது.
புதுச்சேரி மருத்துவக் கல்லூரியில் போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்தது தொடர்பான சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவர் கிருபாசங்கருக்கும், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலமாக மத்திய அமைச்சர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி நீதிமன்றத்திலேயே கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அந்த அமைச்சர் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை. பின்னர் அந்தப் பிரச்சனை அத்தோடு அமுக்கப்பட்டது.
இந் நிலையில நீதிபதியிடம் பேசிய அமைச்சர் யார், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற முழு விவரத்தையும் தெரிவிக்குமாறு மத்திய தகவல் ஆணையத்திடம் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடு்த்த மனுதாரர் கேட்ட விவரங்களை அளிக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் தகவல் ஆணையம் கோரியுள்ளது.
மனுதாரரின் கேள்விகளுக்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்கப்படும் என மத்திய தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா தெரிவித்துள்ளார்.
-
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications