மடிகேரியில் காவிரித்தாய் சிலை கண்டெடு்ப்பு
மடிகேரி: மடிகேரி கோட்டைக்கு அருகே காவிரித் தாயின் பழங்கால சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மடிகேரி கோட்டைக்கு அருகே தோட்டம் அமைக்கும் பணியை சுற்றுலாத் துறை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணியை கான்டிராக்டர் ஒருவரிடம் சுற்றுலாத் துறை ஒப்படைத்தது.
கோட்டையின் மதில் சுவரோரம் அடர்த்தியாக படர்ந்திருந்த மரம், செடிகளை பணியாளர்கள் அப்புறப்படுத்திய போது காவிரித் தாயின் சிலை கிடைத்துள்ளது.
அடர்ந்த முட்புதர்களுக்கு மத்தியில், மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் காவிரித்தாய் சிலை கண்டெடுக்கப்பட்டது. இப்பகுதியை சுற்றி அரசு அலுவலகங்களும், நீதிமன்ற கட்டிடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காவிரித்தாயின் சிலையை சுத்தப்படுத்தி, வண்ணம் பூசி அதே இடத்தில் தோட்டத்திற்கு மத்தியில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிதியுதவி செய்யவும் பலர் முன்வந்துள்ளனர்.
அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து பிறந்தவள் என்றும் காவேர மன்னனுக்கு பிரம்மா அருளிய தவப்புதல்வி என்றும் ஸ்ரீரங்க ரங்கநாயகியின் தாய் என்றும் காவிரித் தாய் பற்றி வரலாற்று புராணக்கதைகள் உண்டு.
மயிலாடுதுறையில் உள்ள தேரழுந்தூர் உட்பட பல்வேறு இடங்களில் காவிரித்தாய்க்கு கோயில்களும் உள்ளன.












Click it and Unblock the Notifications