வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் போலீசார் உஷார்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் ராஜ் பவன் மற்றும் முதல்வர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடக்கும் என மர்ம நபர் விடுத்திருந்த மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து மும்பை முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டது.
மும்பை சர்ச்கேட் ரயில் நிலைய அதிகாரிக்கு கன்னியாகுமரியிலிருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இந்தியில் இருந்த அதில், நவம்பர் 14 அல்லது 28ம் தேதி மும்பையில் பல இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கும் என குறிப்பிட்டிருந்தது.
இதனால், கடந்த 14ம் தேதி மும்பை உஷார்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல 28ம் தேதியான இன்றும் நகரில் உள்ள முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications