For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டது

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: துபாய் நெருக்கடியால் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டும் உயர்வு கண்டது. இதன் விளைவாக 17000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்.

பிற்பகலுக்குப் பிறகு 196 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 17122 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 5100 புள்ளிகளைத் தொட்டது.

பவர் செக்டார் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.

ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் இன்று 1.24 சதவிகித உயர்வு கண்டு ரூ 1076க்கு கைமாறின. ஸ்டெர்லைட், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, ஹிண்டால்கோ பங்குகளும் நல்ல லாபம் பெற்றுத் தந்தன முதலீட்டாளர்களுக்கு.

ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளான ஹாங்செங், ஜப்பானின் நிக்கி போன்றவையும் சாதகமான வர்த்தகத்தைச் சந்தித்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X