கேபி கொடுத்த தகவல்-மடக்கப்பட்ட புலிகளின் 3 கப்பல்கள்!

இது குறித்து திவயின என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பற்படையில் சர்வதேசத்துக்கும் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவு. இலங்கை ராணுவமும் கடல்படையும், கடல்புலிகளைப் பார்த்து நடுங்கினர். ஆனால் இந்தியா மற்றும் பிறநாட்டு உதவி கிடைத்ததால் அவர்கள் புலிகளை தோற்கடித்தனர்.
மற்ற நாடுகளின் உதவியுடன் சர்வதேச கடல் எல்லைகளில் நின்ற விடுதலைப் புலிகளின் கப்பல்களைக் கூட அழித்திருக்கிறது இலங்கை.
இப்போது புலிகளின் வளங்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை சொல்லித் திரிந்தாலும், உள்ளுக்குள் பெரும் அச்சத்துடன் புலிகள் பற்றி தோண்டித் துருவி விசாரித்து வருகிறது.
புலம் பெயர் தமிழர்கள் தங்கள் தேச விடுதலைக்காக கஷ்டப்பட்டு உழைத்து தந்த பணத்தில் வாங்கப்பட்ட பல சொத்துக்கள் உலகமெங்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்து நாட்டுடைமையாக்கம் செய்யும் முயற்சியில் உள்ளதாம் இலங்கை.
இப்போது தங்கள் கஸ்டடியில் உள்ள கேபியிடமிருந்து பல தகவல்களைக் கறந்துள்ள இலங்கை ராணுவம், இன்டர்போல் மூலம் அந்த சொத்துக்களை வளைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
அதில் ஒரு பகுதியாக, கேபி காட்டிக் கொடுத்துள்ள புலிகளின் மூன்று பெரிய கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருகிறார்களாம்.
இவை தவிர மேலும் மூன்று கப்பல்கள் கூட புலிகளுக்குச் சொந்தமாக உள்ளதாம். அவை நிற்கும் இடங்கள் குறித்த விவரங்களையும் சிங்கள் ராணுவத்தினரிடம் கே.பி கூறியுள்ளாராம்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ரம்புகவல்ல,
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் பத்மநாதன் பெயரில் 5 கப்பல்களும், 600 ரகசிய வங்கி கணக்குகளும் இருப்பதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் 5 கப்பல்களில் 3 கப்பல்களை உடனடியாக கைப்பற்றவும், பத்மநாதனின் வங்கி கணக்குகளை முடக்கி அவர் பெயரிலான சொத்துகளை இலங்கை அரசுக்கு சொந்தமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications