றெக்கை கட்டி பறக்கும் காய்கறி விலை!
அதுவும் மழைகாலம் என்பதால் எளிதில் அழுகும் தக்காளி போன்ற காய்கறிகள் கிலோ ரூ. 20 ஐத் தாண்டி விற்கின்றன. சில தினங்களுக்கு முன்பு வரை இதே நாட்டுத் தக்காளி கிலோ ரூ 36க்கு விற்று வந்தது.
இது கோயம்பேடு மார்க்கெட் விலை மட்டுமே. உள்ளூர் கடைகளில் கிலோவுக்கு குறைந்தது 5 கூடுதலாக விலை வைத்து விற்கிறார்கள்.
காரணம் கேட்டால், அரசுதான் எல்லோருக்கும் (?!) சம்பளத்தை ஏற்றியுள்ளதே.. நாங்கள் மட்டும் அதே விலைக்கு விற்க வேண்டுமா என்று கேட்கிறார்கள் பெரும்பாலான கடைக்காரர்கள்.
ஒரு தெருவில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் ஒன்றிரண்டு அரசு ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கௌரவ கூலிகள் மற்றும் கூலிகள்தான் என்பதை இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பது புரியாமல் சொன்ன விலையைக் கொடுத்துவிட்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
காய்கறிகள்தான் என்றில்லை. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையுமே 50 சதவிகிதத்துக்கும் மேல் விலை உயர்ந்து கிடக்கின்றன.
சென்னை மற்றும் புறநகர்களில் இன்றைய காய்கறி விலை (கோயம்பேடு தவிர்த்து):
நாட்டு தக்காளி ரூ. 24, பெங்களூர் தக்காளி ரூ. 28, கேரட் ரூ. 32,வெள்ளை கத்தரிக்காய் ரூ. 40, பாகற்காய் ரூ. 36, முருங்கைக்காய் (ஒன்று) ரூ.5, இஞ்சி ரூ. 40, மிளகாய் ரூ. 20, பீட்ரூட் ரூ. 24, புடலை ரூ. 26, அவரை ரூ. 45, பீன்ஸ் ரூ. 28, உருளை ரூ. 28, கோவக்காய் ரூ. 24, கோஸ் ரூ. 12, சேனை ரூ. 28, சேப்பங்கிழங்கு ரூ. 24, வாழைக்காய் (ஒன்று) ரூ. 5, பூசணிக்காய் ரூ. 10