For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிதம்பரம் வீட்டை முற்றுகையிடுவோம்- தவ்ஹீத் ஜமாத்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை முஸ்லீம் சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை டிசம்பர் 6ம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் தலைவர் எஸ்.எம். பாக்​கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

450 ஆண்​டு​கால பாரம்​ப​ரிய சின்​ன​மா​க​வும்,​ முஸ்​லிம்​க​ளின் வழி​பாட்​டுத் தல​மா​க​வும் விளங்​கிய பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்​பர் 6ம் தேதி இடிக்​கப்​பட்​டது.

இது குறித்து விசா​ரிக்க அமைக்​கப்​பட்ட லிப​ரான் கமி​ஷன் 66 நபர்​களை குற்​ற​வா​ளி​கள் என்று அறி​வித்​துள்​ளது. ஆனால் அவர்​கள் மீது மத்​திய அரசு எவ்​வித நட​வ​டிக்​கை​யும் எடுக்​க​வில்லை.

பாபர் மசூதி இடத்தை முஸ்​லிம்​க​ளி​டம் ஒப்​ப​டைக்​கக் கோரி​யும்,​ பாபர் மசூதி இடிப்​பில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது​ ந​ட​வடிடிக்கை எடுக்க வலி​யு​றுத்​தி​யும் டிசம்​பர் 6ம் தேதி சென்னை மற்​றும் காரைக்​கு​டி​யில் உள்ள உள்​துறை அமைச்​சர் ப. சிதம்​ப​ரத்​தின் வீட்டை முற்​று​கை​யிட்டு போராட்​டம் நடத்த முடிவு செய்​துள்​ளோம்.

இதில் ஆயி​ரக்​க​ணக்​கான முஸ்​லிம் ஆண்​க​ளும்,​ பெண்​க​ளும் குடும்​பத்​து​டன் பங்​கேற்க உள்​ள​னர். ராம​நா​த​பு​ரம்,​ திரு​நெல்​வே​லி​யில் ரயில் நிலைய முற்​றுகை போராட்​டம் நடை​பெ​றும். மற்ற மாவட்​டங்​க​ளில் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெ​றும் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X