ஹெட்லி-ராணாவுடன் தொடர்பு: தவறான தகவலால் நாடு கடத்தப்பட்ட இந்தியர்
மும்பை: ராணா மற்றும் ஹெட்லியுடன் தொடர்புடைய அலுவலகங்கள் மூலம் குடியேற்ற சேவையை மேற்கொண்ட இந்தியரை அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினர். அவரை டெல்லி விமான நிலையத்தில் விசாரித்த இந்திய குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவருக்கும், ஹெட்லி, ராணாவுக்கும் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஹெட்லி, ராணாவின் மும்பை குடியுரிமை சேவை அலுவலகம் மூலம் அந்த இந்தியர் விசா உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு அவர் ஹெட்லி, ராணாவின் அலுவலகங்கள் மூலமாக விசா உள்ளிட்டவற்றைப் பெற்றதை அறிந்த அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் இந்தியாவுக்கு நாடு கடத்தி விட்டனர்.
மேலும், இந்திய குடியரிமைப் பிரிவு அதிகாரிகளுக்கும் அந்த இந்தியர் குறித்த தகவலைத் தெரிவித்தனர். டெல்லிக்கு வந்து சேர்ந்த அந்த இந்தியரை இந்தியக் குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், ஹெட்லி, ராணா அலுவலங்கள் மூலமாக குடியேற்ற சேவையை பெற்றதைத் தவிர அவர் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. ஹெட்லி, ராணா குறித்து அவருக்குத் தெரியாது எனத் தெரிய வந்ததால் அவரை சொந்த மாநிலமான குஜராத் திரும்பிச் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர்.
சம்பந்தப்பட்ட இந்தியர் குடியுரிமை அதிகாரிகளிடம் கூறுகையில், ஹெட்லி, ராணாவின் தீவிரவாதத் தொடர்புகள் குறித்தோ, அவர்கள் குறித்தோ எனக்கு எதுவும் தெரியாது. பெரும் பணம் கொடுத்து விசா உள்ளிட்ட ஆவணங்களை நான் மும்பை அலுவலகத்திலிருந்து பெற்றேன்.
அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடா செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் நான் அமெரிக்கா வந்ததாக கூறி அமெரிக்க அதிகாரிகள் என்னை நாடு கடத்தி விட்டனர் என்றார் அவர்.
அவரது பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications