லஞ்​சமே விபத்​து​க​ளுக்கு கார​ணம்: விஜ​ய​காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்​சம் வாங்​கிக் கொண்டு போக்​கு​வ​ரத்து விதி​மு​றைகளை அமல்படுத்தாமல், கண்​டு​கொள்​ளா​மல் இருப்​ப​து​தான் விபத்​து​க​ளுக்கு கார​ணம் என்று தேமு​திக தலை​வர் விஜ​ய​காந்த் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார்.

அவர் வெளி​யிட்டுள்ள அறிக்கையில்,​

சற்றும் எதிர்பாராத வகையில் திடுக்கிடும் இரண்டு செய்திகள் நம்மை அதிரவைத்துள்ளன.

வே​தா​ரண்​யம் அரு​கில் 25 பள்​ளிக் குழந்​தை​க​ளோடு 2 ஆசி​ரி​யர்​களை ஏற்​றிச் சென்ற வேன் குளத்​தில் கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளா​னது. அதில் ஒரு ஆசி​ரி​யை​யும்,​ 9 குழந்​தை​களு​ம் இறந்​துள்​ள​னர். 11 குழந்​தை​கள் படு​கா​யங்​க​ளு​டன் மருத்​து​வ​ம​னை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​னர்.

அ​து​போல,​ ஆத்​தூ​ருக்கு அரு​கில் 40 பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் சென்ற வேன் மரத்​தில் மோதி கவிழ்ந்​த​தில் 20 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ள​னர். அதில் டிரை​வ​ரும்,​ 4 குழந்​தை​க​ளும்
கவ​லைக்​கி​டமா​ன நிலை​யில் உள்​ள​னர் என்று தெரி​கி​றது.

அ​ரசு நிர்​வா​கங்​க​ளில் எங்​கும் லஞ்​ச​மும்,​ ஊழ​லும் தாண்​ட​வ​மா​டு​வதே இதற்​கெல்​லாம் கார​ணம். சாலை போடும் ஒப்​பந்​த​தா​ர​ரி​டம் லஞ்​சம் வாங்​கு​வது,​ லஞ்​சம் வாங்​கிக் கொண்டு வாகன உரி​மம் ஓட்​டு​நர் உரி​மம் வழங்​கு​வது தான் விபத்​து​க​ளுக்கு கார​ணம்.

ஓட்​டு​நர் உரி​மம் இல்​லா​மல் வாக​னங்​கள் ஓட்​டு​வது,​ அதிக வேகம் மற்​றும் அள​வுக்கு அதி​க​மாக வேன்​க​ளில் பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​று​வது ஆகி​ய​வற்றை லஞ்​சம் பெற்​றுக் கொண்டு கண்​டு​கொள்​ளா​மல் விடு​வ​து​தான் இது​போன்ற விபத்​து​க​ளுக்கு கார​ண​மாக அமை​கி​றது.

போக்​கு​வ​ரத்​துத் துறை​யின் நிர்​வா​கச் சீர்​கேட்​டுக்கு நாம் தரும் விலையே இந்த குழந்​தை​க​ளின் மர​ணங்​கள்.

குழந்தைகளை இழந்து துயருறும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை-சிபிஎம்:

இச்சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளி, கல்லூரி வாகனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயக்கப்படுகின்றனவா? தகுதிச் சான்றுகள் பெற்றுள்ளனவா? அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச்செல்கிறதா? போன்றவைகளை அரசு சரியாக அமலாக்காத காரணத்தினால் தான் இத்தகைய விபத்துக்கள் நடப்பது தொடர்கின்றன.

இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு அரசு கூடுதல் நஷ்டஈடு வழங்க வேண்டும். காயமுற்றவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

விபத்திற்கான காரணங்களை ஆய்வு செய்து விதிமுறையை மீறியது யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

உரிய நடவடிக்கை-தா.பாண்டியன்:

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குளத்தில் வேன் கவிழ்ந்து குழந்தைகளும், ஆசிரியையும் உயிரிழந்து விட்ட நெஞ்சை உருக்கும் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலைக்குள்ளானோம். அந்த மழலையர் பள்ளி அரசு அங்கீகாரம் பெறாத ஒன்று எனவும், அந்த வாகனத்திற்கும் உரிய சான்றிதழ்கள் இல்லை எனவும் பெற்றோர் கூறுகின்றனர்.

இவை பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். அரசு குழந்தைகள் பயிலும் பள்ளிகள் அனைத்தையும் அதிகாரிகளை கொண்டு மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும், அவர்களது வாகனங்களை சோதித்து அனுமதி வழங்கிடவும் வற்புறுத்துகிறோம்
என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+