Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் கரை படியாத கரத்திற்குச் சொந்தமானவன் - பி.டி.தினகரன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: என் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவை, நான் கரை படியாத கரத்திற்கு உரியவன் என்பதை நிரூபிப்பேன் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் கூறியுள்ளார்.

அரசு புறம்போக்கு நிலத்தை பெருமளவில் ஆக்கிரமித்துள்ளதாகவும், விதிகளுக்குப் புறம்பாக வீடுகள், நிலங்களை வாங்கியதாகவும் நீதிபதி பி.டி.தினகரன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனால் அவருக்கு அளிக்கப்படவிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து பி.டி.தினகரன் கூறுகையில், எனக்கு எதிராக நடந்து வரும் இந்தப் பிரசாரத்திற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சுத்தமானவன், கரை படியாத கரத்திற்கு உரியவன் என்பதை நிரூபி்ப்பேன்.

நான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருப்பதால் என்னால் இதற்கு மேல் பேச முடியாது. சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதனால் எனக்கு எதிராக செயல்படுவர்களின் முகத்திரையக் கிழிக்க என்னால் முடியாத நிலை உள்ளது. இருப்பினும் சத்தியம் வெல்லும்.

நான் தவறு செய்யாதவன் என்பதை நான் நிரூபிக்கத் தேவையில்லை. மக்கள் இதை ஒரு நாள் உணர்வார்கள். நான் தூய்மையானவன், கரைபடியாத கரம் உடையவன் என்பதை அவர்கள் ஒரு நாள் உணர்வார்கள் என்றார் தினகரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+