For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை இடைத்தேர்தல்: விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 12ம் தேதி முதல் 4 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

டிசம்பர் 19ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து திருச்செந்தூர் தொகுதியில் 12ம் தேதியும், 15ம் தேதி வந்தவாசியிலும் தனது அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.

ஆறுமுகநேரி, காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், திருச்செந்தூர், நாலுமுனைக்கிணறு, காயாமொழி, பூச்சிக்காடு, வள்ளிவிளை, சோனங்காட்டுவிளை, குரும்பூர் (பஜார்), சேதுக்குவாய்த்தான், வடக்கு ஆத்தூர், புன்னக்காயல், தெற்கு ஆத்தூர் ஆகிய ஊர்களில் 12 மற்றும் 13ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.

வந்தவாசி தொகுதியில் 15, 16ம் தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். தே.மு.தி.க வெளியிட்ட செய்தி்க்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X