அத்துமீறிய 6 இலங்கை மீனவர்கள் கைது
இராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
காரைக்கால் கடல் பகுதியில், இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் சென்று நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடலில் மீன்பிடித்த 6 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த சனத்பிவாத்தோ (40), பிரபாத்(30), சனத்(23), திலான்(24), ரூபான்(25), உபாலி(30) என தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்தும் தெரியவந்தது.
பிடிபட்ட 6 பேரும் இந்திய கடலோர காவல் படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, 6 பேர் மீதும் மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கைதான அனைவரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி 6 பேரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கமாக இந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை மடக்கும் இந்திய கடலோர காவல்படையினர் மண்டபம் காவல் படை முகாமில் ஒப்படைப்பது உண்டு.
பின்னர் மத்திய-மாநில அரசு உத்தரவுப்படி சிங்கள மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிங்கள மீனவர்கள் 6 பேர் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு
இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications