அத்துமீறிய 6 இலங்கை மீனவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

இராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

காரைக்கால் கடல் பகுதியில், இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் சென்று நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கடலில் மீன்பிடித்த 6 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த சனத்பிவாத்தோ (40), பிரபாத்(30), சனத்(23), திலான்(24), ரூபான்(25), உபாலி(30) என தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்தும் தெரியவந்தது.

பிடிபட்ட 6 பேரும் இந்திய கடலோர காவல் படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து, 6 பேர் மீதும் மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கைதான அனைவரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி 6 பேரும் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கமாக இந்திய எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களை மடக்கும் இந்திய கடலோர காவல்படையினர் மண்டபம் காவல் படை முகாமில் ஒப்படைப்பது உண்டு.

பின்னர் மத்திய-மாநில அரசு உத்தரவுப்படி சிங்கள மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிங்கள மீனவர்கள் 6 பேர் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு
இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+