டெல்லியில் ஜாகையை மாற்றுகிறது காங்கிரஸ்

மோதிலால் நேரு வழங்கிய அலகாபாத் ஆனந்த பவனில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் எண் 7, ஜன்தர் மந்தர் சாலையில் தான் நீண்ட நாட்களாக இயங்கி வந்தது. அதன் பிறகு ராஜேந்திர பிரசாத் சாலைக்கு மாற்றப்பட்டது. 1977க்கு பின் இந்த இடத்திலிருந்து அக்பர் சாலைக்கு ஜாகை மாறியது.
எண் 24, அக்பர் சாலை வீடு 1977ல் ஜி.கே மூப்பனாருக்காக ஒதுக்கப்பட்டது. அப்போது அவர் வீட்டை கட்சிக்கு கொடுத்துவிட்டார். அப்போதில் இருந்து காங்கிரஸ் தலைமையகம் இங்கு தான் செயல்பட்டுக்கொண்டிருந்தது. 1990களில் கட்சியின் அலுவலகத்துக்காகத் தான் ராஜிவ் காந்தி பவன் கட்டப்பட்டது.
ஆனால் 24 அக்பர் சாலையே நிலைத்துவிட்டது. இந்த கட்டடம் கட்சி அலுவலகத்துக்கு போதுமானதாக இல்லை என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்தனர். கட்டடத்தை விரிவு படுத்தும் திட்டமும் கோர்ட் உத்தரவால் தடைபட்டது. இந்நிலையில் கட்சிகள் தங்கள் அலுவலகங்களை லுட்யான்ஸ் பகுதியில் இருந்து மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தீனதயாள் மார்க் சாலையில் உள்ள இடத்தை காங்கிரஸ் தேர்வு செய்தது. ஆனால், காங்கிரசாருக்கு இதில் ஒரு தர்மசங்கடம். 'அக்பர் சாலை என்று சொல்லும்போது ஒரு மதச்சார்பற்ற ஃபீல் இருந்தது. இப்போது, தீனதயாள் மார்க் என்பது கொஞ்சம் நெருடலாகத் தான் இருக்கிறது' என்று அவர்கள் கூறிகின்றனர்.
ஜனசங்கத்தின் கொள்யையை உருவாக்கியவர் தீனதயாள் உபாத்தியாயா. கட்சி 125வது ஆண்டுவிழாவை கொண்டாட இருக்கும் நேரத்தில், அனைத்து ஆவணங்கள்ஸ பேனர்கள், லெட்டர் பேடுகள் எல்லாவற்றிலும் தீனதயாள் உபாத்தியாயாவின் பெயர் வருவதை காங்கரஸ் தலைமை ரசிக்கவில்லை.
எனவே, அலுவலக வாசலை கோட்லா சாலையில் அமைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அலுவலகம் தீன தயாள் சாலையில் அமைந்தாலும், அதிகாரப்பூர்வமாக கோட்லா சாலை தான் பயன்படுத்தப்படும்.
புதிய கட்டிடத்துக்கு சோனியா காந்தி 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். 1985ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி தான் ராஜீவ் காந்தி அரசியல் பொறுப்புக்கு வந்தார். எனவே 28ம் தேதியை அடிக்கல் நாட்ட தேர்வு செய்துள்ளனர். ஒரு வருடத்தில் அலுவலகத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications