ராஜபக்சேவின் ஆட்டூழியங்களை அம்பலப்படுத்துவேன்- பொன்சேகா
கொழும்பு: தேர்தலில் வெற்றி பெற்றால் ராஜபக்சேவின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துவேன் என்று இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடப் போவதாக இலங்கையின் முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் சிறப்பு கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. சரத் பொன்சேகா கலந்து கொண்டு பேசுகையில்,
'இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் மகிந்தா ராஜபக்சேவின் ஆட்சிகாலத்தில் நடந்த முறைகேடுகளையும், ஊழல்களையும், அட்டூழியங்களையும் அம்பலப்படுத்துவேன்.
முன்பு நான் ராணுவத்தின் உயர் பதவியில் இருந்ததால் அவரது செயல்பாடுகளை தடுக்க முடியாமல் அமைதியாக இருக்க நேர்ந்தது. எனினும் எனக்கும் அவருக்கும் இடையே மிகுந்த கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால் பதவி காரணமாக அப்போது நான் எதையும் பேசவில்லை.
ராஜபக்சேவின் நிர்வாகத்தில் அளவுக்கு மீறிய ஊழல் நிறைந்து இருந்தது. மக்கள் பொங்கி எழுகிற அளவுக்கு அவரது ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகள் நடந்தன. அவற்றையெல்லாம் நான் வெளியிடுவேன். அவர் செய்த பல்வேறு பாவச்செயல்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.
இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் மதித்து அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன் என்று நான் உங்களிடம் உறுதி அளிக்கிறேன். நான் விரும்புவதெல்லாம் இலங்கையை ஒரு சுதந்திர நாடாக உயர்த்த வேண்டும் என்பது தான்.
இங்குள்ள மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாக வாழவும், சிங்கள மொழியை தாய்மொழியாக பேசவும் நடவடிக்கை எடுப்பேன். ராஜபக்சே மக்களிடம் மாயவித்தை காட்டுகிறார். அவரது நிர்வாகம் எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது' என்றார் பொன்சேகா.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications