For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பர் 1: கிரிக்கெட் அணிக்கு லோக்சபாவில் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதோடு, டெஸ்ட் தரிவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இன்று லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதோடு, ஐசிசி ரேங்கிங்கில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வாழ்த்துச் செய்தியை லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அவையில் வாசித்தார்.

ஆளுக்கு ரூ. 25 லட்சம்...

இதற்கிடையே, முதலிடத்தைப் பிடித்ததைப் பாராட்டும் வகையில், இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ரூ. 25 லட்சம் பரிசளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மழை வெள்ளம், வறட்சி, பஞ்சம், பட்டினி போன்ற சம்பவங்களின்போது இப்படியெல்லாம் பணத்தை உடனே அள்ளி விடாது கிரிக்கெட் வாரியம். ஆனால் இந்திய அணியினர் ஏதாவது செய்து விட்டால் உடனே பரிசு மழையைப் பொழிந்து தள்ளி விடும் கிரிக்கெட் வாரியம்.

இதனை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

அந்த அடிப்படையில் தற்போது டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய அணியைக் கெளரவிக்கும் வகையில் வீரர்கள், அணி ஊழியர்கள், தேர்வுக் குழுவினருக்குப் பரிசு மழையைப் பொழிந்துள்ளது.

வீரர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும், ஊழியர்கள், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ. 10 லட்சும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோணிதான் பெஸ்ட் - ஸ்ரீகாந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் டோணிதான் இதுவரை இருந்த கேப்டன்களிலேயே சிறந்தவர் என்று தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் பெரிய அடியாக அடித்துள்ளார்.

இவர், ஷேவாக் டபுள் செஞ்சுரி போட்டபோது பெவிலியனில் இருந்தபடி வாயில் விரலை வைத்து விசிலடித்து குஷியாக ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், டோனி சிறந்த கேப்டன் ஆவார். உலகின் நம்பர்-1 இடத்தை பிடித்ததற்காக அவரையும், அவரது அணி வீரர்களையும் வாழ்த்துகிறேன். இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி செல்கிறார் என்றார்.

கவாஸ்கர் கூறுகையில், இந்திய வீரர்களின் கடினமான உழைப் பால் நம்பர்-1 இடம் கிடைத்துள்ளது. ஆனால் அதை தக்க வைக்க இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். ஏனென்றால் மற்ற அணிகள் அந்த இடத்தை பிடிக்க வெகு அருகில் உள்ளன. இந்திய வீரர்கள் திறமையானவர்கள். அதை வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஆனால் எப்போதுமே 100 சதவீத திறனை வெளிப்படுத்த முடியாது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X