நம்பர் 1: கிரிக்கெட் அணிக்கு லோக்சபாவில் பாராட்டு
டெல்லி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதோடு, டெஸ்ட் தரிவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இன்று லோக்சபாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியதோடு, ஐசிசி ரேங்கிங்கில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வாழ்த்துச் செய்தியை லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அவையில் வாசித்தார்.
ஆளுக்கு ரூ. 25 லட்சம்...
இதற்கிடையே, முதலிடத்தைப் பிடித்ததைப் பாராட்டும் வகையில், இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ரூ. 25 லட்சம் பரிசளிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மழை வெள்ளம், வறட்சி, பஞ்சம், பட்டினி போன்ற சம்பவங்களின்போது இப்படியெல்லாம் பணத்தை உடனே அள்ளி விடாது கிரிக்கெட் வாரியம். ஆனால் இந்திய அணியினர் ஏதாவது செய்து விட்டால் உடனே பரிசு மழையைப் பொழிந்து தள்ளி விடும் கிரிக்கெட் வாரியம்.
இதனை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அந்த அடிப்படையில் தற்போது டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்திய அணியைக் கெளரவிக்கும் வகையில் வீரர்கள், அணி ஊழியர்கள், தேர்வுக் குழுவினருக்குப் பரிசு மழையைப் பொழிந்துள்ளது.
வீரர்களுக்கு தலா ரூ. 25 லட்சமும், ஊழியர்கள், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ. 10 லட்சும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோணிதான் பெஸ்ட் - ஸ்ரீகாந்த்
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் டோணிதான் இதுவரை இருந்த கேப்டன்களிலேயே சிறந்தவர் என்று தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் பெரிய அடியாக அடித்துள்ளார்.
இவர், ஷேவாக் டபுள் செஞ்சுரி போட்டபோது பெவிலியனில் இருந்தபடி வாயில் விரலை வைத்து விசிலடித்து குஷியாக ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், டோனி சிறந்த கேப்டன் ஆவார். உலகின் நம்பர்-1 இடத்தை பிடித்ததற்காக அவரையும், அவரது அணி வீரர்களையும் வாழ்த்துகிறேன். இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி செல்கிறார் என்றார்.
கவாஸ்கர் கூறுகையில், இந்திய வீரர்களின் கடினமான உழைப் பால் நம்பர்-1 இடம் கிடைத்துள்ளது. ஆனால் அதை தக்க வைக்க இந்திய அணி கடுமையாக போராட வேண்டும். ஏனென்றால் மற்ற அணிகள் அந்த இடத்தை பிடிக்க வெகு அருகில் உள்ளன. இந்திய வீரர்கள் திறமையானவர்கள். அதை வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஆனால் எப்போதுமே 100 சதவீத திறனை வெளிப்படுத்த முடியாது என்றார்.
-
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ்












Click it and Unblock the Notifications