கடலூர் சிறையில் பினாயிலை குடித்து கைதி தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் பினாயில் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தவர் பாலு (26). இவர் சிறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவர் மயக்கமானார்.
தகவல் அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.












Click it and Unblock the Notifications