பொன்சேகாவுடன் சம்பந்தன் திடீர் சந்திப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலி்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில், அக்கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன், திடீரென சரத் பொன்சேகாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
சமீபத்தில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார் சம்பந்தன். இந்த நிலையி்ல தற்போது எதிர்தரப்பு வேட்பாளரான பொன்சேகாவையும் அவர் சந்தித்துள்ளார். இரு தரப்பினரிடமும் பேசுவது என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை பொன்சேகாவை சந்தித்துப் பேசினார் சம்பந்தன்.
சிறுபான்மையினரின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அவர்களின் உடனடிப் பிரச்சினைகளை விரைந்து தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து இரு முக்கிய வேட்பாளர்களின் நிலைப்பாட்டையும் அறிந்த பின்னர் தங்களது முடிவை எடுக்க தீர்மானித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப்பினர் கூறுகையில், தற்போதைய நிலையில், தமிழ் மக்களின் ஆதரவின்றி எந்த வேட்பாளரும் வெல்ல முடியாது என்ற நிலைமை உறுதியாகி வருகிறது. இந்தச் சூழலில் எங்களுக்கு (தமிழர்களுக்கு) என்ன நியாயத்தைச் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இரு தரப்புகளும் தத்தமது நிலைப்பாட்டைக் கூறுவதற்கு, விஷயங்களை "கக்குவதற்கு" இடமளித்துப் பார்த்திருப்போம். உரியவேளை வரும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்வோம். இப்போது அவசரப்பட்டு முடிவு எடுப்பதற்கு எதுவும் இல்லை என்று உதயன் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அடுத்து ரணில் விக்கிரமசிங்கேவையும் சம்பந்தன் சந்திப்பார் என்று தெரிகிறது.
பொன்சேகா - சம்பந்தன் சந்திப்பின்போது என்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
இருப்பினும் சம்பந்தன் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
ஈழத்தமிழர்களுக்கு யார் அதிக ஆதரவாக நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் வரும் அதிபர் தேர்தலில் ஆதரவளிப்போம்.
தேர்தலில் ஆதரவு என்பது மிக முக்கியமான விவகாரம். இதனால் இதுகுறித்து அவசரமாக முடிவெடுத்திட முடியாது. அதிபர் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறன்றன. இதனால் நிதானமாக முடிவெடுக்கப்படும். இதுகுறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம்.
ஆதரவளிப்பதற்கு முன்பு நன்கு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தை மட்டுமல்லாமல் எதிர்காலத்தையும் கருத்தில் வைத்துதான் ஆதரவு குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது என்றார்.
இக்கூட்டமைப்பின் எம்.பிக்களில் ஒருவரான பிரேமச்சந்திரன் கூறுகையில்,
ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி, வரும் அதிபர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரியிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.
இலங்கை அதிபர் தேர்தலி்ல ராஜபக்சே மற்றும் பொன்சேகா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் பெருமளவில் வாக்குகள் பிரியும் என்பதால் தமிழர்களின் ஆதரவைப் பெறுபவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் தமிழர்களின் வாக்குகளைப் பெற ராஜபக்சேவும், பொன்சேகாவும் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications