வாழ்க்கைக்குப் பின்னர் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்க்கைக்குப் பின்னர் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
உதயநிதி நேற்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவரும், அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதியும் தங்களின் வாழ்க்கைக்கு பிறகு தங்கள் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்து அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கையெழுத்திட்டனர்.
அவர்களுடன் மேலும் 31 பேரும் வாழ்க்கைக்குப் பின்னர் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தனர்.
அந்த விண்ணப்பங்களை மியாட் மருத்துவமனை நிர்வாகத்தில் கொடுக்க அன்பில் மகேஷ், பொய்யாமொழி, வக்கீல் பி.கே.பாபு ஆகியோரிடம் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார். பின்னர் விண்ணப்பங்கள் மியாட் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.
உதயநிதியின் தானத்தைப் பாராட்டி அவருக்கு மியாட் மருத்துவமனை நன்றி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications