புகை மாசுக் குறைப்பு குறித்த உலக நாடுகளின் நிலைப்பாடு
சென்னை: புவிவெப்ப மாற்ற மாநாடு கோபன்ஹேகனில் தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு நாடும் புகை மாசுக் குறைப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நிலைப்பாடு குறித்த ஒரு பார்வை...
இந்தியா - 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைக்க முன்வந்துள்ளது. 2020ம் ஆண்டுக்குள் இதை செய்வதாக இந்தியா கூறியுள்ளது. இருப்பினும் சட்டம் போட்டு தங்களை கட்டுப்படுத்தி இதை செய்ய வைக்க முனையக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்கா - உலகின் மிகப் பெரிய புகை மாசு ஏற்படுத்துபவர்களில் 2வது இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. 2005ம் ஆண்டிலிருந்து 2020க்குள் 17 சதவீத மாசைக் குறைப்பதாக கூறியுள்ளது. அதேசமயம் 2025க்குள் 30 சதவீத மாசைக் குறைக்கவும் உறுதியளித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் - 2020க்குள் 20 சதவீத மாசைக் குறைக்க ஐரோப்பிய யூனியன் முன்வந்துள்ளது. பிற தொழில்மய நாடுகள் ஒன்றாக முன்வந்தால் இந்த அளவை 30 சதவீதமாக அதிகரிக்கவும் தயார் என அறிவித்துள்ளது.
ரஷ்யா - 2020க்குள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்க ரஷ்யா தயார். முன்பு 15 சதவீதம் வரை தயார் என கூறி வந்தது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா - புகை மாசுக் குறைப்புக்கு கனடா தரும் உறுதிமொழி 20 சதவீத குறைப்பு. அதேசமயம், கனடாவின் கீழ் உள்ள கியூபெக் பிராந்தியம், ஐரோப்பிய யூனியன் என்ன முடிவெடுக்கிறதோ அதை பின்பற்றுவதாக தெரிவித்துள்ளது.
மெக்சிகோ - 2050ம் ஆண்டுக்குள் 50 சதவீத புகை மாசைக் கட்டுப்படுத்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது மெக்சிகோ.
ஜப்பான் - 25 சதவீத புகை மாசை 2020க்குள் கட்டுப்படுத்துவதாக ஜப்பான் கூறுகிறது.
நியூசிலாந்து - 2020க்குள் 10 முதல் 20 சதவீத புகை மாசைக் குறைப்பதாக தெரிவித்துள்ளது நியூசிலாந்து. அதேசமயம் கோபன்ஹேகன் மாநாட்டின் முடிவைப் பொறுத்து தனது நிலையும் மாறும் என்றும் அது தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - புகைக் குறைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களை ஆஸ்திரேலிய எம்.பிக்கள் நிராகரித்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலியாவின் நிலையில் தெளிவில்லை.
நார்வே - 2020ம் ஆண்டுக்குள் 30 சதவீத புகை மாசைக் குறைக்க நார்வே விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசமயம், 40 சதவீதம் வரை இதை அதிகரிக்கவும், 2030ம் ஆண்டுக்குள் புகை மாசே இல்லாமல் செய்யவும் அது ஆர்வமாக உள்ளது.
சீனாவின் புகை மாசுக் குறைப்பு உறுதி மொழி 40 சதவீதமாகும், பிரேசிலின் உறுதிமொழி 36 சதவீதமாகவும் உள்ளன. இந்தோனேசியா 26 சதவீதத்தைக் குறைப்பதாகவும், தென் கொரியா 30 சதவீதமாக குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications