ஜெ. வீடு முன் அதிமுகவினர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தலில் தில்லுமுல்லு நடப்பதாகக் கூறி நாமக்கல் மாவட்ட அதிமுகவினர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டு முன் போராட்டம் நடத்தினர்.
அதிமுக உட்கட்சித் தேர்தல்கள் மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றன.
இந் நிலையில் நாமக்கல் மாவட்ட அதிமுகவின் உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முறைகேட்டிற்குக் காரணமான அதிமுக மாவட்டச் செயலாளர் தங்கமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் ஜெயலலிதா வீடு முன் அந்த மாவட்ட அதிமுகவினர் நூற்றுக்கணக்கி்ல் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தனது உதவியாளரை அவர்களிடம் அனுப்பினார் ஜெயலலிதா. அவரிடம் தங்கமணி மீது புகார் பட்டியல் அடங்கிய மனுவை தந்துவிட்டு அதிமுகவினர் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications