இளங்கோவனை கண்டித்து கோபியில் வீடுவீடாக நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

கோபி: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை கைது செய்ய வலியுறுத்தி வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதால் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மாதம் இளங்கோவன் ஈரோட்டில் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை அகற்றும் போராட்டம் நடத்தினார். காங்கிரசார் பிரபாகரன் படத்துடன் வைக்கப்பட்டிருந்த தட்டி போர்டுகளை அகற்றி கிழித்தெறிந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இந் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று மாலை சிலர் வீடு வீடாக சென்று சில துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். வர்த்தக நிறுவனங்கள், கடைகளிலும் வினியோகம் செய்துள்ளனர்.

அந்த துண்டு பிரசுரத்தில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கைது செய்யக்கோரியும், அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலான வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அந்த துண்டு பிரசுரங்களை பறிமுதல் செய்தனர். அதில் அச்சக பெயரோ, போராட்டக்காரர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்தவர்களை தேடி வருகின்றனர்.

ஜாமீன் மனு நிராகரிப்பு:

இந் நிலையில் சென்னையில் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் வீடு தாக்கப்பட்ட வழக்கில் ‌கைதான நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த 6 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை செசன்ஸ் கோர்ட் நிராகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+