முத்துக்குமரன் பிறந்த மண்ணில் திமுகவுக்குத் தோல்வியைத் தாருங்கள் - வைகோ
திருச்செந்தூர்: இலங்கையில் இன அழிப்பு போருக்கு பீரங்கி வழங்கி உதவியது மத்திய அரசு. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் பிறந்த மண் இது. இந்த மண்ணின் மக்கள் திமுக கூட்டணியிலான மத்திய அரசிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அம்மன் நாராயணனை ஆதரித்து வைகோ பிரசாரத்தில் குதித்துள்ளார்.
ஆத்தூரில் பிரச்சாரத்தைத் தொடங்கி அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கருணாநிதி அரசாங்கத்தில் செயல்பாடுகள் சரியில்லை. ஜனநாயகம் மாறி பனநாயகமாக இருந்து வருகிறது.
இத்தொகுதியில் அமைச்சராக இருந்து செயல்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது சுயலாபத்திற்காக அதிமுகவிலிருந்து பிரிந்து திமுகவில் சேர்ந்துள்ளார். இதனால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கு நஷ்டம்? பொதுமக்களின் வரிப் பணம்தான் வீனாகிறது.
மத்திய அரசு இலங்கையில் இன அழிப்பு போருக்கு பீரங்கி வழங்கி உதவியது. ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரன் பிறந்த மண் இது. இந்த மண்ணின் மக்கள் திமுக கூட்டணியிலான மத்திய அரசிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும். திமுகவினர் தற்போது தோல்வி பயத்தில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அராஜகத்தை மீறி அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். இடைத் தேர்தல் வெற்றியை பொதுமக்கள் அதிமுகவிற்கு அளித்தால் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மாற்றம் ஏற்படும். அதிமுக வேட்பாளர் அம்மன் டி நாராயணன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் வைகோ.
-
தவெக கட்சியினருக்கு ஷாக்! கரூர் வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த மாசி பவுன்ராஜ் அதிமுகவில் இணைந்தார்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications