சவூதியில் டாக்டர், நர்ஸ் வேலைக்கு ஆளெடுப்பு - நாகர்கோவிலில் சிறப்பு முகாம்
நெல்லை: சவூதி அரேபியாவில் டாக்டர்கள், செவிலியர் பணியிடங்களுக்கு நாகர்கோவில், கொச்சியில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்சிஎஸ், எம்ஆர்சிஎஸ், எம்டிஎஸ் பட்டம் பெற்ற கன்சல்டன்ட்டுகள், சிறப்பு டாக்டர் பட்டம் பெற்ற எம்பிபிஎஸ் படித்த பொது டாக்டர்கள், பெண் செவிலியர்களை தேர்வு செய்ய சவூதி அரேபியா அமைச்சகத்தின் மருத்துவ தேர்வு குழுவினர் இந்தியாவிற்கு வருகின்றனர்.
இப்பணியிடங்களுக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்ற 55 வயதுக்கு உட்பட்ட பல்வேறு பிரிவுகளில் டாக்டர்கள், 40 வயதுக்கு உட்பட்ட பொது மற்றும் குழந்தை நல பிரிவில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பெண் செவிலியர்கள், 4 ஆண்டு பிஎஸ்சி பட்டம் அல்லது 2 ஆண்டுகள் டிப்ளமோ பெற்ற பெண் ரெஸ்பிரேடரி டெக்னீசியன்கள் விண்ணப்பிக்கலாம். நிறைவான ஊதியம், இலவச விசா, இருப்பிடம், விமான டிக்கெட் வழங்கப்படும்.
இந்த ஆளெடுப்புக்காக நாகர்கோவில் மற்றும் கொச்சியில் தனி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான மேலும் விபரங்களை அறிய www.omcmanpower.com என்ற அரசின் வெப் சைட் மூலம் அறிந்து கொள்ளலாம்.