நாளை சென்ட்ரல் ரயில் நிலையம் மூடல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூடப்படவுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் விரிவாக்கம், கிராசிங் மற்றும் சிக்னல் பராமரிக்கும் பணி 4 கட்டமாக நடக்கிறது.
நாளை இறுதிக் கட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சென்ட்ரல் நிலையத்துக்கு எந்த ரயில்களும் வராது.
அங்கிருந்து எந்த ரயிலும் புறப்பட்டுச் செல்லாது.
சென்ட்ரலுக்கு வர வேண்டிய ரயில்கள் எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம் நிலையங்களில் நிறுத்தப்படும்.
பயணிகளுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீ்ழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அந்த ஹெல்ப் லைன் எண்கள்:
29015209, 29015210, 29015211, 25330710, 25330717, 28190216












Click it and Unblock the Notifications